மாலத்தீவு விவகாரம் : தொலைபேசி மூலம் டிரம்ப் மோடி ஆலோசனை..

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கபட்டுள்ள நிலையில், அதிபர் அப்துல்லா யாமீனின் பிடியில் இருந்து மாலத்தீவை மீட்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியிடம் போனில் ஆலோசனை நடத்தினர்.

மாலத்தீவில் நடப்பது என்ன? சீனாவின் கைக்கு செல்கிறதா மாலத்தீவு?

மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள எம்.பிக்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.