மலேசிய சிறையில் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை : அமைச்சர் சுஷ்மா சுவராஜ்..

மலேசிய சிறையில் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் 49 இந்தியர்களை தூதரகம் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

திமுக எம்.பி கனிமொழியின் கோரிக்கை தொடர்பாக பதில் கடிதம் எழுதியுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ,

ஜனவரியில் தொழிலாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நிலுவை ஊதியத்துடன் இந்தியர்கள் மீட்கப்படுவர் என உறுதியளித்துள்ளார்.