மலேசியாவில் ஓரினச்சேர்க்கைக்கு நூறு பேர் முன் பிரம்படி தண்டனை..

மலேசியாவில் ஓரினச்சேர்க்கை செய்த பெண்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கப்பட்டதற்கு அந்நாட்டுப் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய சட்டம் தீவிரமாக கடைபிடிக்கப்படும் மலேசியாவில் இரு பெண்கள் காரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பிடிபட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இரு பெண்களுக்கும் தலா 3,300 ரிங்கிட் (ஏறத்தாழ ரூ.57 ஆயிரம்) அபராதம் வித்துள்ளது. மேலும், தலா 6 பிரம்படியையும் தண்டனையாக விதித்துள்ளது.

நூறு பேருக்கு மேல் கூடியிருந்த இடத்தில் வைத்து அந்த இரு பெண்களுக்கும் பிரம்படி கொடுக்கப்பட்டது. அந்நாட்டின் வடக்கு மாகாணமான டெரங்கானுவில் முதல் முறையாக பெண்கள் ஓரினச்சேர்க்கைக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது, ‘‘இந்த தண்டனை தொடர்பாக அமைச்சர்களுடன் விவாதித்தேன்.

இந்த தண்டனை இஸ்லாமிய மதம் பற்றி தவறான தோற்றத்தை ஏற்படுத்தும். இதேபோன்ற குற்றங்களுக்கு லேசான தண்டனைகளை வழங்க வேண்டும். ஏனென்றால், இஸ்லாம் மக்களை இழிவுபடுத்தும் மதம் அல்ல.’’ என்று குறிப்பிட்டுள்ளார்.