பிரதமர் மோடி குறித்து விமர்சனம் : காங்., கட்சியிலிருந்து மணிசங்கர் ஐயர் இடைநீக்கம்..


பிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்ததற்காக, மணி சங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.

குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியின் விமர்சனம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் கூறுகையில், மோடி கீழ்தரமான மனிதர். அவர் பண்பட்டவர் அல்ல. இந்த நேரத்தில் அவர் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது ஏன் எனக்கூறினார்.

மணிசங்கர் தனது பேச்சுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார். இதுபோன்ற விமர்சனங்களை காங்கிரஸ் ஆதரிக்காது எனவும் கூறினார்.

இந்நிலையில் மணி சங்கர் அய்யரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்து காங்., கட்சி உத்தரவிட்டுள்ளது.

மணிசங்கரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.