மன்னார்குடி அருகே பாலியல் வன்கொடுமை: 10- ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு..

மன்னார்குடி அடுத்த வடகோபனுரில் 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 10 ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

கடந்த 10 ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய தாஸ்,விஜய்,அஜித்,முருகேஷ் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.