மே தினம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

மே தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கணக்கில்லா வேலை நேரம், கொத்தடிமைத் தனம் ஆகியவற்றுக்கு எதிராக போராடி உரிமைகளை மீட்டெடுத்த தினமே மே தினம் என்றும் நாட்டின் வளர்ச்சிக்காகவும்,

பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் அயராது உழைக்கும் தொழிலாளர் பெருமக்களின் உழைப்பு போற்றுதலுக்குரியது என்று கூறியுள்ளார்.

உழைக்கும் மக்களின் உரிமைத் திருநாளான இந்த இனிய நாளில் தொழிலாளர்கள் நலமுடனும், வளமுடனும் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.