மயிலை கபாலீஸ்வரருக்கு நாகாபரணம் சமர்ப்பிப்பு


சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கும் கபாலீஸ்வரருக்குத் தங்கத்தால் ஆன நாகாபரணம் சமர்ப்பிக்கப்பட்டது.

சிவலிங்கத்தின் மீது சாத்தவென்று, இன்று தங்கத்தால் ஆன நாகாபரணம் காஞ்சி சங்கர மட சுவாமிகள் ஸ்ரீஜெயந்திர சரஸ்வதிகள், விஜயேந்திர சரஸ்வதிகள் முன்னிலையில் அவர்கள் பூஜித்து இறைவனுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.