மருத்துவ கலந்தாய்வு வரையறை செய்யாதது ஏன்?: உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி..

80% க்கும் மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்கலாமா?

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி தெளிவாக வரையறை செய்யாதது ஏன்? என நீதிபதி கேள்வி கேட்டுள்ளார்.

ஒரே ஒரு மாணவருக்கு சதவீத சான்றிதழ் வழங்கியதில் வேறுபாடு உள்ளது ஏன்? எனவும் நீதிபதி கேட்டுள்ளார்.

சுகாதாரத்துறை செயலரிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.