குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் ஐக்கியம்…

பிஹாரில் ராஷ்டிரிய லோக் சமதா கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா இன்று எதிர்க்கட்சிகளின் ‘மெகா’ கூட்டணியில் இணைந்தார்.

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மெகா கூட்டணி அமைக்கும் விதமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று

டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் மத்திய அமைச்சர் பதவி விலகியுள்ளது தே.ஜ.கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிஹாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் பாஜக 29, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 7 மற்றும் குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி4 தொகுதிகளில் போட்டியிட்டன.

இதில், பாஜக விற்கு 22, பாஸ்வானுக்கு 6, குஷ்வாஹாவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.

தே.ஜ.கூட்டணியில் பிஹார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்து விட்டார். இதனால், அவரது ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டி இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது.

எனவே குறைந்த தொகுதிகளை ஒதுக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதில் குஷ்வாஹா சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவுடன் நட்பு பாராட்டி வந்தார். இந்தநிலையில் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து குஷ்வாஹா வெளியேறினார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் அறிவித்தார்.

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இருந்தும் குஷ்வாஹா வெளியேறியது பிஹாரில் பாஜக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் பிஹாரில் பாஜக கூட்டணிக்கு எதிரான மெகா கூட்டணியில் குஷ்வாஹா இன்று முறைப்படி இணைந்தார்.

டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஷ்ட்ரீய ஜனதாதள மூத்த தலைவர் தேஜஸ்வி யாதவ்,

காங்கிரஸ் எம்.பி அகமது படேல், முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் ஆகியோர் முன்னிலையல் குஷ்வாஹா எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இணைந்தார்