மேகதாது விவகாரம் : தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பேரணி தொடங்கியது..

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள் வாகனங்களில் பேரணி நடத்தி வருகின்றனர்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.