அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாமா செய்ததாக தகவல் ..

பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கடந்த 1998ம் ஆண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த நீதிமன்றங்கள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை மட்டும் விசாரிக்கும் என்று தொிவிக்கப்பட்டு

முதல்கட்டமாக தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி சென்னையிலும் இந்த சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.

கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினா் மற்றும் பேருந்துகளின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த வழக்கு தொடா்பாக 108 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 போ் குற்றவாளிகள் என்று தொிவிக்கப்பட்டது.

இந்த 16 நபா்களில் ஒருவராக பாலகிருஷ்ணா ரெட்டியும் உள்ளாா். பாலகிருஷ்ணா ரெட்டி தற்போதைய அ.தி.மு.க. அமைச்சரவையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறாா்.

3 ஆண்டு சிறை

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் பலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டது.

அதில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முதல்வருடன் சந்திப்பு

நீதிமன்றத்தில் இருந்து அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி வெளியில் வந்ததும் நேரடியாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வா் பழனிசாமியை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினாா்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை பெறுபவா்கள் பதவி இழக்க வேண்டும்.

அதே போன்று மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டால் 6 ஆண்டுகளுக்கு தோ்தலில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜினாமா:

இந்நிலையில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ராஜினாம செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமாவைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் காலியிடம் 21 ஆக உயர்ந்தது. இவரின் ராஜினாமா கடிதம் ஆளுனர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.