அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே? : ப.சிதம்பரம் கேள்வி..


தனிஅதிகாரிகளே போதுமென்றால் அரசை ஏன் மக்கள் பிரதிநிதிகள் நடத்தவேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். தனிஅதிகாரிகள் பதவி நீட்டிப்பு மசோதா பற்றி ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி மீது நம்பிக்கை இல்லையென்றால் தமிழ்நாடு அரசில் ஏன் அமைச்சர்கள் இருக்க வேண்டும் என்றும் சிதம்பரம் வினவியுள்ளார். அமைச்சர்கள் பதவி விலகி அதிகாரிகளிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமே? என்றும் சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.