நாட்டுக்காக பணியாற்றுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்துகிறோம் : ராகுல் காந்தி

விவசாயிகள் நலனுக்காக காங்கிரஸ் கட்சி பாடுபடுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளோம் என்றும்,

நாட்டுக்காக பணியாற்றுமாறு பிரதமர் மோடியை வலியுறுத்துவதாக கூறினார்.

மேலும் விவசாயிகள் பிரச்சனையில் பிரதமர் மோடி கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியைத் துாங்க விடமாட்டோம் எனக் கூறினார்.