பணமதிப்பிழப்பு 2-ம் ஆண்டு : கருப்பு தினமாக அனுசரித்து காங்., போராட்டம்..

இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்,

கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி இரவில் மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். அதை தொடர்ந்து புதிய ரூ. 500 மற்றும் ரூ. 2000 நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது.

இந்த பணமதிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு இருந்தாலும், பல தரப்பு மக்கள் இன்றளவும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.