முல்லைப்பெரியாறு அணை 142 அடியை தொட்டது..


முல்லைப்பெரியாறு அணை நேற்று 142 அடியை தொட்டது. இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சியில் உள்ளனர். அணைக்கு நீர் வரத்து 25 ஆயிரத்து 733 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதேபோல், 2 ஆயிரத்து 336 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.