நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்ப்பதாக ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.