நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் திடீர் கைது

நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். ஆளுநர் மாளிகையில் இருந்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .அவர் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மகாராஷ்ட்ர மாநிலம் மும்பை செல்வதற்காக சென்னை விமானநிலையம் வந்த நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் காலையில் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் பின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிர்மலாதேவி விவகாரம் குறித்து வெளியிடப்பட்டிருந்த செய்திக் கட்டுரையை அடுத்து நக்கீரன் கோபால் மீது ஈஆளுநர் மாளிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதாகவும், இதையடுத்து, ஆளுநர் பணிகளில் தலையிட்டதாக 124 உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் கோபால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

Nakkeeran Gopal Arrested