நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது.

நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை விடுவிக்க எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் உத்தரவிட்டார்.

இந்நிலையில், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட கோரி ஜாம்பஜார் காவல் ஆய்வாளரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மேலும் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாதிற்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.