நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபால் கைது : வைகோ கண்டனம்..

இன்று காலை ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் பேரில் நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

நக்கீரன் கோபால் கைதிற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
“நக்கீரன் கோபாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தது கண்டனத்துக்குரியது.

அனைத்து ஊடகங்களையும் மிரட்டும் வகையில் இந்த கைது அமைந்துள்ளது.

நக்கீரன் கோபாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.