நளினி விடுதலை கோரிய வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி..


25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் தன்னை முன்கூடியே விடுவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் நளினி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது .