தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகல்..


தினகரன் அணியிலிருந்து தான் விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சம்பத், ’நான் இனிமேல் அரசியலில் இல்லை. அண்ணாவும், திராவிடமும் இல்லாத இடத்தில் எனக்கு வேலை இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் இனி என்னைப் பார்க்கலாம்’ என தெரிவித்தார்.