நீட் தேர்வு ரத்து; எழுவர் விடுதலை; மாநிலப் பட்டியலில் கல்வி : திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில், இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்படும்.

* வேளாண் துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

* மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடைந்திட, மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சமில்லாமலும் நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும்.

* மத்திய நிதிக்குழுவின் அமைப்பும், பணிகளும், மாநிலங்களின் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்.

* மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்.

* தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன்படி, குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்படும்.

* பாஜக அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

* தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ,1,50,000 ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெட்ரோலிய எரிபொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க நிர்ணயிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும்.

* சமையல் எரிவாயு மானியத் தொகை வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பிருந்தது போல சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

* தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்க 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் கிராமப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

* தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த உரிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்.

* 10 ஆம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவர்.

* கிராமப்பகுதிகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூ.50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும்.

* 1964 ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை ஒப்பந்தம்படி இந்தியாவுக்குத் திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் மேலும், தாமதமில்லாமல் இந்தியக் குடியுரிமை அளிக்கப்படும்.

* நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்கவரி உரிமம் முடிந்த பின்னரும் வசூலிக்கப்படும் சுங்க வரிக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

* பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ரயில் பயணச்சீட்டு சலுகை வழங்கப்படும்.

* சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய நகரங்களான மதுரை, சேலம், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும்.

* கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப்படும். அங்கு கிடைத்துள்ள பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

* கஜா போன்ற கடும் நிவாரண நிதிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் அரை சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.

* புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் ஏற்படுத்தப்படும்.

* இயற்கை சீற்றத்திலிருந்து கடலோர மக்களை பாதுகாக்க புதிய சட்டம்.

* கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10,000 சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் குறைந்தபட்சம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

*சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் கொண்டுவரப்படும்.

* காவிரி டெல்டா பகுதிகள் வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்கப்படும்

* மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிட வலியுறுத்தல்

* 100 நாள் வேலைவாய்ப்பில் விவசாயிகளுக்கு விவசாய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். 100 நாட்கள் வேலைவாய்ப்பு என்பது 150-ஆக உயர்த்தப்படும்.

* மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படும்.

* சேது சமுத்திரம் திட்டப் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

* அனைத்து மதங்களின் மாண்பை பாதுகாக்க தக்க நடவடிக்கை

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்காக வலியுறுத்தல்

* கேபிள் டிவி கட்டணம் முந்தைய விலைக்கு குறைக்கபடும்

* மனித கடத்தலை தடுக்க புதிய சட்டம்

* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை

* ஏழை விவசாய பொருளாதாரத்தை பாதுகாக்க இலவச மின்சாரம்

* 10-ம் வகுப்பு வரை படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை

* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்.

* பெண்களுக்கு தொழில்தொடங்க ரூ.50 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

* மாணவர்களுக்கு இலவச ரயில் பயண சேவை.

* மனித கடத்தலை தடுக்க சட்டம் இயற்றப்படும் .

* நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

* இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் பாதுகாப்பிற்கு புதிய திட்டம்

* காவிரி படுகையை பாதுகாக்க சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

* சேது சமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

* இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

* மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும்
என கூறினார்.
நீட் தேர்வு ரத்து; எழுவர் விடுதலை; மாநிலப் பட்டியலில் கல்வி;திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்..