நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று..


தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற 2 வங்க சிங்கங்கள் ஒருவர் விவேகானந்தர்,மற்றொருவர் நேதாஜி.
நேதாஜி என்ற சொல்லே வீரத்தின் ஊற்று..

வீர வரலாறு :
நேதாஜி ’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ்
சந்திரபோஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவராவார்…

” இந்தியா உடனடியாக சுதந்திரம்
அடைய வேண்டும் , அதற்கு ஒரே வழி போர் மட்டுமே…!’ என தீர்மானித்து இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த ஆங்கிலேயரை எதிர்த்து தாக்குதல் நடத்தியவர் …

நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி இராணுவ ரீதியாக போராடிய மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்
வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம் ..

பிறப்பு :
ஜனவரி 23, 1897 ,

இடம் :
கட்டாக், ஒரிசா மாநிலம் ,

இந்தியா பணி :
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியதேசிய ராணுவத்தை உருவாக்கியவர் .

நாட்டுரிமை :
இந்தியா பிறப்பு இந்திய விடுதலை போராட்ட வீரரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் , 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23 ஆம் நாள் இந்தியாவின் ஒரிசா மாநிலத்திலுள்ள கட்டாக் என்ற இடத்தில் ஜானகிநாத் போஸுக்கும் , பிரபாவதி தேவிக்கும் ஒன்பதாவது மகனாக , ஒருவங்காள
இந்து குடும்பத்தில் பிறந்தார் .

இவருக்கு எட்டு சகோதரர்களும் மற்றும் ஆறு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய தந்தை ஒரு புகழ் பெற்ற வக்கீலாகவும் , தாய் ஒரு தெய்வபக்தி மிக்கவராகவும் இருந்தனர் …

ஆரம்ப வாழ்க்கை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் , தன்னுடைய ஆரம்பக் கல்வியை , கட்டாக்கிலுள்ள “பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில்” தொடங்கினார் …

பின்னர் , 1913ல் “கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் ” தன்னுடைய உயர் கல்வியை முடித்த அவர் படிப்பில் முதல் மாணவனாகவும் விளங்கினார்…

சிறுவயதிலிருந்தே விவேகானந்தர் போன்றோரின் ஆன்மீகக் கொள்கைகளை ஆர்வமுடன் படித்தும் வந்தார். 1915 ஆம் ஆண்டு “ கொல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில்” சேர்ந்த அவர், “சி.எஃப் ஓட்டன்” என்ற ஆசிரியர், இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை சொ ன்னதால் , ஏற்பட்ட தகராறால் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார்.
பின்னர், “ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில்” சேர்ந்து இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தன்னுடைய பெற்றோர்களின் விருப்பத்திற்காக 1919 ஆம் ஆண்டு ஐசிஎஸ் தேர்வுக்கு படிக்க லண்டனுக்கு சென்றார் . ஐ.சி.எஸ் தேர்வில்
நான்காவது மாணவனாக தேர்ச்சிப்பெற்றார் . 1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, சுபாஷ் சந்திர போசை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழி வகுத்தது எனலாம் . இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலா பாக் என்ற இடத்தில் , ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு , ‘ ரெஜினால்ட் டையர் ’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது ….

அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் , வெள்ளையர் ஆட்சி மீது சுபாஷ் சந்திர போஸிற்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல்

லண்டனில் தன்னுடைய பணியை
துறந்து 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி வரவும் செய்தது …

திருமண வாழ்க்கை :

பாரத நாட்டின் விடுதலைக்காக வியன்னா, செக்கோஸ்லோவேகியா , போலந்து , ஹங்கேரி , இத்தாலி , ஜெர்மனி , ஐரோப்பா , ஆஸ்திரியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்த நேதாஜி அவர்களுக்கு , ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலி என்பவரின் அறிமுகம் கிடைத்தது , இவர்களின் சந்திப்பு பிறகு காதலாக மலர்ந்து டிசம்பர் 27, 1937 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .

இவர்களுக்கு 1942 ஆம் ஆண்டு , அணிதா போஸ் என்ற மகளும் பிறந்தார் . சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்கு‘ தன்னுடைய நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்ய கூடாது எனக் கருதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பிய சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் …

சி. ஆர் தாசை அரசியல் குருவாக கொண்டு போராட்டத்தில் ஈடுபடவும் தொடங்கினார் . 1922 ஆம் ஆண்டு வேல்ஸ் என்னும் இளவரசரை இந்தியாவிற்கு அனுப்ப பிரிட்டன்
அரசு தீர்மானித்தது . இதனால் வேல்ஸ் வருகையை எதிர்த்து போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவுசெய்தது….

“ கொல்கத்தா தொண்டர் படையின் ” தலைவராக பொறுப்பேற்று , தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்திய நேதாஜி மற்றும் மேலும் பல காங்கிரஸ் தொண்டர்களையும் ஆங்கில அரசு கைது செய்தது . சட்டசபை தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்ட சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியா சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர் தாஸ் மற்றும் நேருவும் கருதினர் . ஆனால் , காந்தியும் அவருடைய ஆதரவாளர்களும் எதிர்த்தனர் .

இதனால் காந்திக்கும் , தாசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கட் சியிலிருந்து பிரிந்தார் சி.ஆர்தாஸ், அவர் “சுயாட்சிக் கட்சியை” தொடங்கியது மட்டுமல்லாமல் , “சுய ராஜ்ஜியா” என்ற பத்திரிக்கையையும் தொடங்கி நேதாஜி தலைமையின் கீழ் பொறுப்பையும் ஒப்படைத்தார் …

1928 ஆம் ஆண்டு காந்திஜியின் தலைமையில் தொடங்கிய காங்கிரஸ் மாநாட்டில் சுயாட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய காந்திஜியின் முடிவை , ‘தவறு’ என நேதாஜி எதிர்த்து கூறினார். இதனால் காந்திக்கும் , நேதாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது …

பிறகு , இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி ஐரோப்பாவிற்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார் . 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நேதாஜி அவர்கள் , “நான் தீவிரவாதி தான்…! எல்லாம் கிடைக்க வேண்டும் அல்லது ஒன்றுமே தேவையில்லை என்பதுதான் எனது கொள்கை” என முழங்கினார்….

நேதாஜி அவர்கள் , தலைவரானதும் ரவீந்திரநாத் தாகூர் அழைத்து ,
அவருக்குப் பாராட்டுவிழா நடத்தியதோடு மட்டுமல்லாமல் , ‘நேதாஜி’ (மரியாதைக்கூரிய தலைவர் என்பதுபொருள்) என்ற பட்டத்தையும் அவருக்கு வழங்கினார். 1939 ஆம் ஆண்டு, இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேதாஜி போட்டியிட்டார் . போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக்கண்ட காந்தி, அவருக்கு எதிராக நேருவையும், ராஜேந்திர பிரசாத்தையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்…

ஆனால் , அவர்கள் போட்டியிட மறுக்கவே “பட்டாபி சீதாராமையாவை” நிறுத்தினார் . ஆனால் , பட்டாபி சீதாராமையா தேர்தலில் தோற்றுவிடவே , தனக்கு பெரிய இழப்பு என்று கருதிய காந்தி, உண்ணாவிரதம் இருக்க தொடங்கினார். இதனால், நேதாஜி அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாகவே வெளி யேறினார்.‘

பிரித்தானிய அரசுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுகிறார்’ என கூறி 1940 ஆம் ஆண்டு, ஆங் கிலேய அரசு நேதாஜியைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ‘ இரண்டாம் உலக ப்போர் நடந்து கொண்டிருந்த மும்முரமான கால கட்டம் அது, பாரத தேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஆங்கில அரசை எதிர்க்க இதுதான் சரியான தருணம்’ என கருதிய நேதாஜி அவர்கள், ஜன வரி 17, 1941 ஆம் ஆண்டு மாறுவே டம் அணிந் து சிறையிலிருந்து தப்பி, பெஷாவர் வழியாக காபூல் அடை ந்த அவர், பின்னர் கைபர் கணவாய் வழியாக ஆப்கானிஸ்தா னை அடைந்தார்.

ரஷ்யா வழியாக இத்தாலிக்கு செல்ல வேண்டும் எனநினைத்த நேதாஜி இந்து குஷ் கணவாய் வழியாக ரஷ்யாவை அடைந்தார். எதிர்பாராத விதமாக ஹிட்லரின் அழை ப்பு வரவே,அவரின் அழைப்பை ஏற்றுபின்னர் ஜெர்மனியி லுள்ள மாஸ்கோவை அடை ந்த அவர், இந்திய சுதந்திரத் தை பற்றி ஹிட்லரிடம் பேசி அவருடைய உதவியை நாடி னார்.சுதந்திர இந்திய ராணுவம்1941 ஆம் ஆண்டு “சுதந்திர இந்திய மையம்” என்ற அமைப்பைத் தொடங்கிய நேதாஜி அவர்கள், சுதந்திர இந்திய வா னொலியை பெர்லினில் இருந்து தொடங்கியதோடு மட்டுமல் லாமல், இந்திய விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தியும் உலகப் போர் பற்றிய செய்திகளை யும் இதில் ஒளிபரப்பினார்.பிறகு, ஜெர்மன் அயலுறவு துறை அமைச்சர் “வான் ரிப்பன் டிராபின்” உதவியுடன் சிங்கப்பூரில் “ராஷ் பிகாரி போஸ்”தலைமையில் தொடங்கப்பட்டு செயல்படாமல் கிடந்த இந்திய தேசிய ராணுவத்திற்கு தீவீர பயிற் சி அளித்து அதனை தலைமையேற்றும் நடத்தினார்.

1943 ஆம் ஆண்டு, சிங்கப்பூரி ல் நடந்த மா நாட்டில் அரசு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர அரசின் பிரகடன த்தை வெளியிட்டார். பிறகு, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத் தாலி போன்ற நாடுகளின் ஆதரவுடன், பர்மா வில் இருந்த படியே “இந்திய தேசிய ராணுவப்படையை” கொ ண்டு 1944ல்ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆனால் இந்திய தேசியப் படை, பல காரண ங்களால் தோல்வியைத் தழுவி பின் வாங்கியது. அப்பொழுது ஆகஸ்ட் 15, 1945 ஆம் ஆண்டு நேதாஜி வா னொலி மூலம் வீரர்களுக்கு “இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர் வு அடைந்துவிடாதீர்கள்! நம்பிக்கை யுடன் இருங்கள், இந்தியாவை நிரந் தரமாக அடிமைத் தலத்தில் கட்டி வைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக் கும் இல்லை” “ஜெய் ஹிந்த்” என உரையாற்றினார். அன் று அவர் குறிப்பிட்ட படியே சரியாக இரண்டு ஆண்டுகளில், அதாவது ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலைப்பெற்றது.