ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் அறிவிக்க ஸ்டாலின் கோரிக்கை..

ஊரடங்கு வரும் மே-3 ந்தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு குறித்த அடுத்தகட்ட அறிவிப்பை

மத்திய, மாநில அரசுகள் சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா என்ற குழப்பம், எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார்.