பனியில் உறைந்து போன நயாகரா நீர்வீழ்ச்சி..


அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி நிறைந்துள்ளது. கொட்டும் பனியால் சாலைகள், மரங்கள், வீடுகள் என அனைத்தும் வெள்ளைத்துணி போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. அதிகபட்சமாக மவுண்ட் வாஷிங்டனில் மைனஸ் 34 டிகிரி குளிர் நிலவி வருகிறது. கடுமையான குளிர் நிலவி வருவதால் அங்குள்ள ஏரிகள் பனியில் உறைந்துக் காணப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமான நயாகரா நீர்வீழ்ச்சியும் அமெரிக்காவில் பனி பொழியும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கும் இடையே அமைந்துள்ளது.

இந்நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியும் கடும் குளிரினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயரமான இந்த நீர்வீழ்ச்சி பனியால் உறைந்து போய்யுள்ளது. ஆர்பரித்து கொட்டும் நீரால் பல மீட்டர் தொலைவுக்கு எங்கும் தண்ணீர் சிதறும் நயாகரா நீர்வீழ்ச்சி பகுதி தற்போது உறைந்து போயுள்ளது.
நயாகரா நீர்வீழ்ச்சி முழுவதுமாக உறையவில்லை. ஆனால் தண்ணீர் கொட்டும் பகுதியை தவிர சுற்றியுள்ள பகுதிகள் பனிப்பிரதேசங்களை போல் காட்சி அளிக்கின்றன. முற்றிலும் உறையாவிட்டாலும் சிறிய அளவில் தண்ணீர் கொட்டி வருகிறது.

நீர்வீழ்ச்சியை சுற்றியுள்ள மரங்களும் வெள்ளை நிறத்தில் பொம்மை மரங்களைப் போல் உறைந்துள்ளது. பனிக்கட்டியாய் உறைந்து போயுள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் ரசித்து செல்கின்றனர். நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவுக்கு கடுமையான குளிரும் நிலவி வருகின்றது