வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..

தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் அதன் விளைவாக தமிழகத்தில் அனல் காற்று வீசும்.
அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் 100 டிகிரிக்கு மேல் வெயில் உக்கிரமாக உதித்து வருகிறது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலோடு பலத்த காற்றுடன் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.