நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர் மரணம்..


கடந்த 31-ம் தேதி நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கம்பம் வரை செல்லும் நடைபயணத்தை மதுரையில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்திலிருந்த ம.தி.மு.க தொண்டர் ரவி நியூட்ரினோவுக்கு எதிராக தீக்குளித்தார். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.