ஒகி புயல் பாதிப்பு : குமரி விரைகிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்..


ஒகி புயலின் கோரத் தாண்டவத்தால் கன்னியாகுமரி மாவட்டமே நிலைகுலைந்து போய்வுள்ளது.4 நாட்களாக மாவட்டம் இருளில் முழ்கி உள்ளது.

புயல் பாதிப்புக்களை நேரில் பார்வையிடுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கன்னியாகுமரிக்கு செல்கிறார்.

தேனியில் இருந்து சாலை வழியாக கன்னியாகுமரி செல்கிறார். புயல் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 3 அமைச்சர்கள் கன்னியாகுமரியில் முகாமிட்டுள்ள நிலையில், துணை முதல்வரும் செல்ல உள்ளார்.