ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு..


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 2100 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்கு 2100 கனஅடி காவிரி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் காவிரி டெல்டா பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.