ஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு, பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துாத்துக்குடி மாவட்டத்திற்கும், பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.