ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்க : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வலியுறுத்தல்..

தற்போது கரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி போய்வுள்ள இளைஞர்களைக் குறி வைத்து ஆன்லைன் மூலம் சூதாட்ட ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் விளம்பரமாக வருகின்றன.

இந்த விளம்பரங்களைப் பார்த்து இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி வியைாடிவருகின்றனர். பணம் வைத்து ரம்மி விளையாடுவதை சூதாட்டம் என காவல் துறை நடவடிக்கை எடுக்கும் சூழலில்

தற்போது ஆன்லைன் மூலம் பணம் வைதது சூதாட்ட விளையாடத் தொடங்கியிருப்பது இளைஞர்களை தவறான வழிவகுக்கும் என பலர் கருத்து கூறி வரும் நிலையில்

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய மத்தி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டம் எனத் தெரிவித்தனர்