ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறீர்களா : வரும் 3 நாட்களுக்கு வர வேண்டாம் என ஆட்சியர் கோரிக்கை..

தொடர்ந்து ஊட்டி உட்பட நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வரும் நிலையில்,நீலகிரி மாவட்டத்திற்கு 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் 3 நாட்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதை தவிர்க்குமாறு கூறியுள்ளார்.