முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மருத்துவமனைக்கு வருகை..


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வருகை தந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வருகை தந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது வீட்டிலேயே மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கிடையில் நேற்று முன் தினம் இரவு, கருணாநிதிக்கு ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 8 மருத்துவர்கள் கொண்ட குழுவினர், சிகிச்சை அளித்து வருகின்றனர். கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க, அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்து சென்றனர்.

இதையடுத்து தற்போது, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து நலம் விசாரித்துள்ளார். இந்த நிலையில், சென்னையில் பெய்த கனமழையிலும் நனைந்தபடியே தொண்டர்கள் கருணாநிதிக்காக காத்துக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.