பிலிப்பைன்ஸில் நெல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்தார் : பிரதமர் மோடி..


ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ளார். அங்கு லாஸ் பனோஸ் பகுதியில் உள்ள சர்வதேச நெல் ஆய்வுக் கழகத்திற்கு நேரில் சென்று மோடி பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு புதிதாக அமைக்கப்பட்டு நெல் ஆய்வுக் கூடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.