பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு..


பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் ஆழ்துளை கிணறு அமைக்க பள்ளம் தோண்டியபோது 12 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மேலபழஞ்சூரில் கிணறு வெட்டும் பணி நடந்தது. அப்போது, விநாயகர், சிவன், பார்வதி உள்ளிட்ட 12 ஐம்போன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஆய்வு நடந்தது.