பள்ளி கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதால் அரசாணை பொருந்தாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

பள்ளி கல்வித்துறையின் அரசாணை புதிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என நீதிபதி தெரிவித்தார்.