உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் செப்டம்பர் 11 ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டும் நடத்தாததற்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா, நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் ஹர்மந்தர்சிங் இருவரும் செப்.,11ம் தேதி ஆஜராகும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.