பபுக் புயல் : தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..

அந்தமான் கடலில் மையம் கொண்டுள்ள ‘பபுக்’ புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாய்லாந்து வளைகுடாவில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த புயல் 6-ஆம் தேதி மாலை அந்தமான் கடலை கடக்குமென்றும், அப்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.