பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது குருபூஜை: யாகசாலை பூஜை தொடங்கியது..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது குருபூஜை வரும் அக்டோபர் 30-ந்தேதி கொண்டாடப்படவுள்ளநிலையில்

இன்று அவரின் நினைவிடத்தில் குருபூஜைக்கான யாகாசாலை பூஜை தொடங்கியது.

வரும் 30-ந்தேதி தமிழக முதல்வர்,துணை முதல்வர் என தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பசும்பொன் நினைவிடத்தில் மரியாதை செலுத்தவுள்ளனர். தேவரின் பிறந்த தினமும்,காலமான தினமும் ஓரே தேதி,மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.

குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.