பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ என்ற புத்தகத்தை வெளியிட்டதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கடந்த 2002ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து புத்தகங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கில் இருந்து, 2006ஆம் ஆண்டில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.