மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் : ஸ்டாலின் பேச்சு

மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார்.

கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் ஊராட்சி சபை கூட்டத்தில் பேசிய அவர், கிராமத்தில் தான் தனது அரசியல் பயணம் தொடங்கியது என்றார்.

மக்கள் பிரச்சனை பற்றி அதிமுக அரசு கவலைப்படுவது இல்லை என்றும் முதல்வர் பதவியை பிடிக்கவே ஓபிஎஸ் யாகம் நடத்தினார் என்றும் குற்றம் சாட்டினார்.

தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்