பிரதமர் கிசான் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி முறைகேடு : ஆட்சியர் தகவல்..

பிரதமர் கிசான் உழவர் நிதிஉதவி திட்டத்தில் சேலம் மாவட்டத்தில் ரூ.6 கோடி மோசடி நடந்துள்ளதாக ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

10,000க்கு மேற்பட்டோர் விவசாயிகள் என்று கூறி உழவர் நிதியை பெற்று மோசடி செய்துள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

10,000க்கு மேற்பட்டோர் தலா ரூ.4,000 முதல் ரூ.6,000 வரை மோசடியாக பணம் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மோசடியாக பணம் பெற்றவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1.8 கோடி மீட்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பேட்டியளித்துள்ளார்.