பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: சி.பி.ஐ. போலீசார் வழக்கு பதிவு

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழக அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கும் உத்தரவிட்டது.

ஆனால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.

இந்த நிலையில், தமிழக அரசும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன் அடிப்படையில்,  பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடனடியாக விசாரணையை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.