ஏழைகளுக்கு நன்மை செய்வதை தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க-தான் : முதல்வர் குற்றச்சாட்டு..

நிலக்கோட்டை அ.தி.மு.க சட்டமன்ற வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து வத்தலகுண்டு பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டதாக கூறினார்.

ஏழைகளுக்கு நன்மை செய்வதை தடுக்கும் ஒரே கட்சி தி.மு.க-தான் என்று என்று குற்றம் சாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பது ஸ்டாலினுக்கு பொறுக்கமுடியவில்லை என்று தெரிவித்தார்.

தேர்தல் முடிந்தவுடன் ஏழை தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஏற்கெனவே அறிவித்தபடி 2ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தார்.