மாணவர்கள் மீது தாக்குதல் : `இந்தியா கேட்’ பகுதியில் பிரியங்கா காந்தி போராட்டம்…

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டகாரர்களுக்கு எதிராக போலீஸார் தடியடி நடத்தியதும், பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
போராட்டத்தில் காங்கிரஸ்மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி உட்பட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.