தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் கைது..

சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை அகற்ற முயற்சித்து காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகர் விஷால் கைது செய்யப்பட்டார்.

விஷால் பூட்டை அகற்ற முயற்சித்ததற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சட்டவிரோதமாக போடப்பட்ட பூட்டை அகற்ற எங்களுக்கு பாதுகாப்பு தருவதை விட்டுவிட்டு இப்படி தடுக்கிறீர்களே என ஆவேசமுடன் விஷால் பேசினார்.

ஆனால் காவல்துறையினர் பத்திர பதிவு துறையினர் பூட்டை அகற்ற வருகின்றனர் நீங்கள் அவர்களிடம் பேசி கொள்ளுங்கள்.

இப்போது சம்பவ இடத்தை விட்டு நகருங்கள் என எச்சரித்தனர். ஆனால் விஷால் தரப்பு தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இறுதியாக அவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.