பேராசிரியை விவகாரம் : ஆளுநருடன் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திப்பு..


அருப்புக் கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை தவறாக வழி நடத்த துண்டும் விதமாக பேசிய பதிவால் கடும் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துடன் மதுரை காமராஜ் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்லத்துரை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.