அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு…

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, கடலூர், திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.