மக்கள் உங்களை நம்பவில்லை பாதுகாப்புப் படையைதான் நம்புகிறார்கள் : பிரதமர் மோடியை தாக்கிய சித்தார்த்..

பாகிஸ்தானில் இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் மோடி பேசி வருகிறர்.

இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்யும் பிரதமர் மோடி, நாடு ஒரே குரலில் பேச வேண்டும்.

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குண்டு போட்டு அழித்த விமானப்படையினரின் துணிச்சலான செயலுக்கு எதிர்க்கட்சியினர் ஆதாரம் கேட்கிறார்கள்.

பயங்கரவாத சவாலை எதிர்த்து போரிட்டுக் கொண்டிருக்கிற பாதுகாப்பு படைகளுக்கு காங்கிரஸ் கட்சியும்,

அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரவு அளிப்பதற்கு பதிலாக, படை வீரர்களின் மன உறுதியைக் குலைக்கிற விதத்தில் நடந்து கொள்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் எனக்கு எதிராக சதி செய்கின்றன. நான் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.

எதிர்க்கட்சிகளோ என்னை ஒழித்துக்கட்ட சதி செய்கின்றன. எல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில்,

பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சிகள் கருத்துகளை வெளியிடுகின்றனர் என்றார்.

“இயற்கையாகவே நம்முடைய ராணுவ படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், பெருமை கொள்ள வேண்டும்.

ஆனால் சிலர் இந்தியப் படைகளை கேள்வி கேட்க விரும்புகிறார்கள், அது ஏன் என்று தெரியவில்லை,” என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதனை டுவிட்டரில் டுவிட் செய்து, நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார். பாதுகாப்புப் படையைதான் மக்கள் நம்புகிறார்கள்,

உங்களை இல்லை என பிரதமர் மோடியை சித்தார்த் தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு பதில் அளிக்கும் வகையில் வெளியிட்டு டுவிட் செய்தியில், இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு,

அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள்.

நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்’’ என குறிப்பிட்டுள்ளார்.