பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் : தமிழக அரசு அரசாணை வெளியீடு…

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா ஆகியவற்றிற்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.